Thursday, January 23, 2014

ஆசிரியையின் தவறான கருத்ததுப் பரிமாறலினால் 23 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

(எம்.எஸ். எம் ஸப்றாஸ்)

உணவு நஞ்சானதால் ஏறாவூர் றகுமாணியா வித்தியாலய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி என்ற செய்தி நேற்று (21) காலை ஏறாவூர் எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேவேளை பல ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை 11.35 மணிக்கு உணவு நஞ்சானதால் மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி றகுமானியா வித்தியாலயத்தின் தரம் 5ல் கல்வி கற்கும் குறித்த ஒரு வகுப்பைச் சார்ந்த மாணர்கள் மாத்திரமே, இவ்வாறு ஏறாவூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களை சோதனையிட்ட ஏறாவூர் தள வைத்தியசாலையின் தளவைத்திய அதிகாரி Dr.பழீல் தலைமையிலான குழுவினர் மாணவர்கள் வாந்தி, வயிற்றோட்டத்திற்கு உட்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo