Tuesday, January 18, 2011
ஏறாவூரில் வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகின்றது
கடந்த மூன்று வாரகாலமாக எமதூரில் தொடர்ந்தேச்சையாக பெய்து வந்த பெரு மழையினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டதோடு பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிரு ந்து வந்த நிலையில் தற்போது மழை ஒரளவு நின்று வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகின்றது.இதனால் அகதி முகாம்களில் தங்கியிருந்த மக்கள் படிப்படியாக தங்களது வீடுகளுக்கு திரும்பி வருவதுடன் அவர்கள் தங்கியிருந்த பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளில் ஊரிலுள்ள பொது அமைப்புக்களும்,உள்ளுர் வெளியூர் தனவந்தர்களும், அரசியல்வாதிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருவது பாரட்டப்படவேண்டியதொன்று.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment