Tuesday, January 25, 2011

ஏறாவூர் நகர சபைக்கு பல முனைப் போட்டி

எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தரமுயர்த்தப்பட்ட ஏறாவூர் நகர சபைக்கு பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இத்தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் உள்ளூர் அரசியல்வாதிகள் தங்களது பெயரை வேட்பாளர் பட்டியலில் இடம்பெறச்செய்வதில் மிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
எது எவ்வாறாயினும் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ளதுடன் பலத்த போட்டியும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் உள்ளூர் அரசியல் வாதிகள் வெள்ள நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo