மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு
மாகாண முதலமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில்
பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் முதலமைச்சரை சந்தித்தனர்.
இச்சந்திப்பி;ன் போது அம்மக்கள் அன்றாடம்
எதிர்நோக்குகின்ற வாழ்வாதாரப் பிரச்சனைகளை முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினர்.
இதனை கவனத்தில் எடுத்த முதலமைச்சர் இக் கிழக்குமாகாண தமிழ்
முஸ்லிம் சிங்கள மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்த்து எதிர்கால வாழ்வினை வளம்
பெறச் செய்வதே எனது நோக்கமும் சேவையுமாக அமையும் எனவும் எவருக்கும் பாரபட்சமின்றி சமமாக சகல சேவைகளும்
பகிர்ந்தளிக்கப்படுமெனவும் இச்சந்திப்பின்
போது கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் உறுதியாக தெரிவித்தார்.
தகவல்
(எம்.எச்.எம். நளீர்)
No comments:
Post a Comment