Saturday, March 7, 2015

மக்கள் மேம் பாட்டுக்கழக நேயம் அமைப்பின் உதவி வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்...


மக்கள் மேம் பாட்டுக்கழக நேயம் அமைப்பு ஏழை மக்களின் நலனுக்காக மேற்கொண்டு வரும் உதவிகளின் ஒரு கட்டமாக ஏறாவூரில் வாழும் வறிய குடும்பங்களுக்கு குடி நீர் பெறுவதற்கான உபகரனற்களும் மக்களுக்கு குடிநீர் தாங்கியும் நீர் பம்பிமோட்டர்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் இந்த அமைப்பின் சேவைகளை பாராட்டியதோடு உதவிபெறுபவர்கள் தொடர்ந்தும் உதவி பெற்றும்வரும் தலைவிதியை மாற்றியமைத்து நாம் சொந்தகாலால் தலைநிமிர்ந்து வாழவேண்டிய நிலை உருவாகும் காலம் வரவேண்டும் என கூறினார்.
அத்துடன் இன மதவேறுபாடுகளை கலைந்து ஏறாவூர் சமூகத்தை ஒன்றுபடுத்தும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான பலாபலன்களை எல்லோரும் விரைவில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகும் எனவும் குறிப்பிட்டார். நேயம் அமைப்பின் இஸ்தாபக தலைவர் இஸ்ஹாக் தலைமையில் நேற்று இடம் பெற்ற இந்நிகழ்வின் போது மாகாண சபை உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா நகரசபை உறுப்பினர் தஸ்ஸீம். மட்டக்களப்பு மாவட்ட பொலீஸ் அதிகாரிகள் பள்ளிவாயல் சம்மேலன தலைவர்கள் என பலரும் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தகவல்
(எம்.எச்.எம். நளீர்)

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo